மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

வடமாநிலங்களில் நடைபெற்றுவந்த லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்கலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2024, 3:00 am

DIN

வடமாநிலங்களில் நடைபெற்றுவந்த லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்கலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

அகில இந்திய மோட்டாா் வாகன கூட்டமைப்பினருடன் மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டால், ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாது என அவர்  உறுதியளித்தார்.

லாரி ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

சரக்கு லாரியுடன் டேங்கர் லாரி ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்மாநிலங்களிலும் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு பதிலாக சில திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. 

 இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சியா எனப் பெயர்மாற்றம் செய்தது. 

இதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில்  ஹிட் & ரன் எனப்படும் விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. இதற்கு முன்பு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். 

எரிபொருள் விநியோகிக்கும் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெட்ரோல், டீசலுக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.