காங்கிரஸின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் துவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது.
பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் துவங்குவதில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் வேறெந்த பகுதியிலும் நடை பயணத்தைத் துவங்க அனுமதி அளிக்குமாறு மணிப்பூர் அரசைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐசிசி தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர்களான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே சி வேனுகோபால் ஆகியோர் நியாய யாத்திரைக்கான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வலைதளத்தை துவக்கிவைத்தனர்.
இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் துவங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், மணிப்பூரின் மற்ற இடங்கள் எதிலும் யாத்திரையைத் துவங்க அனுமதி கோரியிருப்பதாகவும் வேனுகோபால் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாரத் ஜோடோ நியாய யாத்திரை வரும் ஜனவரி 14ஆம் நாள் துவங்கவுள்ளது. 6,713 கிலோமீட்டர்களை நடைப்பயணம் மற்றும் பேருந்து மூலம் பூர்த்திசெய்யும் இந்த யாத்திரை, 110 மாவட்டங்களைக் காணவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

