அகில இந்திய மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அல்கா லம்பா காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
அல்கா லம்பா இன்று (ஜனவரி 10) புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றார்.
மகளிர் காங்கிரஸின் முந்தைய தலைவரான நெட்டா டிஸோசா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிக்க | குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகம் நிராகரிப்பு: பாஜக தலைவர் பதில்!
அதையடுத்து அவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி கூறினார்.
முன்னதாக ஜன.5-ஆம் தேதி மகளிர் காங்கிரஸின் தலைவராக அல்கா லம்பாவும், மாணவர் சங்கத்தின் தலைவராக வருண் சௌதரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.