நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம்: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிர பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

News image

சஞ்சய் ரௌத் (கோப்புப்படம்)

Updated On :10 ஜனவரி 2024, 9:13 pm IST

மகாராஷ்டிர பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனை கட்சியாக அறிவித்திருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படி போராடுவோம் என்று உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவு தில்லியில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டப்படி இல்லை.

பால் தாக்கரேவின் சிவசேனை கட்சியை அழிப்பது பாஜகவின் கனவாக உள்ளது. ஆனால் சிவசேனை இப்படி முடிவடையாது. இந்த உத்தரவு ஒரு சதி.

எங்களுக்கு இது ஒரு கருப்பு நாள். பால்தாக்கரே உருவாக்கிய கட்சிக்கு இப்படிச் செய்வது மகாராஷ்டிர மக்களை முதுகில் குத்துவது போன்ற கொடுமையான செயல். பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து நிச்சயமாக உச்ச நீதிமன்றம் செல்வோம்.” என்று தெரிவித்தார். 

மேலும் “பால் தாக்கரேவின் கட்சியை திருடர்களிடம் ஒப்படைக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத், பேரவைத் தலைவரின் உத்தரவை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் தலைவர்களின் முடிவு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் முடிவைப் போல இருக்கும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.