புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளுடன் 7 பள்ளிகளின் தரம் உயர்வு: கேரள அரசு

கழக்கூட்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 7 அரசுப் பள்ளிகள் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு, சர்வதேசத் தரத்துடன் உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் வி. சிவன்குட்டி தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜனவரி 2024, 5:40 pm

DIN

திருவனந்தபுரம்: கழக்கூட்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 7 அரசுப் பள்ளிகள் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு, தற்போது சர்வதேசத் தரத்துடன் உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் வி. சிவன்குட்டி இன்று தெரிவித்தாா்.

தொகுதி முழுவதும் பல்வேறு பள்ளிகளில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 92 உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளையும் அமைச்சர் திறந்து வைத்தார். அதே வேளையில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார் சிவன்குட்டி.

ஹைடெக் வகுப்பறைகளில் 75 அங்குல எல்இடி மானிட்டர், ஓபிஎஸ் கணினி, யுபிஎஸ், குளிரூட்டப்பட்ட சூழல், ஹெட்ஃபோன்களுடன் கூடிய மைக்ரோஃபோன், நிர்வாக இருக்கைகள், மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போன்ற வசதிகள் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.