உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறித்து...

News image

ஒகேனக்கல் பிரதான அருவி - கோப்புப் படம்

Updated On :8 வினாடிகள் முன்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4,500 கன அடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 9,000 கனஅடி வரை அதிகரித்ததால் கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.

இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் உபரிநீர்வரத்துக் குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கன அடியாகவும், பின்னர் 6,000 கன அடியாகவும் குறைந்தது.

இதையடுத்து மீண்டும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று மாலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4,500 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Summary

The water inflow into the Cauvery River at Hogenakkal has increased from 4,500 cubic feet per second to 8,000 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.