அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளால் வெளியிடப்பட்ட ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல் உறைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை ஜன.22-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையைத் திறந்துவைக்க உள்ளார். இந்த நிகழ்விற்கு பல்வேறு முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டார். ராமர் கோயில், சூரியன், சராயு நதி மற்றும் கோயில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தினார். மேலும் உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய அஞ்சல் உறைகள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.