ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் பலி

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

News image
கோப்புப் படம்.
Updated On :19 ஜனவரி 2024, 12:40 pm

DIN

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூமில் உள்ள கம்ஹாரியா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் மீது அந்த வழியாக வந்த கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

மேலும் உடல்கள் மோசமான நிலையில் காணப்பட்டதாக டாடாநகர் சந்திப்பு கண்காணிப்பாளர் அபிஷேக் சிங்கால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தை கடக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

பலியானவர்களில் 2 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதுவரை யாரும் உடல்களுக்கு உரிமை கோரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.