விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் பலி

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

News image

கோப்புப் படம்.

Updated On :19 ஜனவரி 2024, 12:40 pm

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூமில் உள்ள கம்ஹாரியா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் மீது அந்த வழியாக வந்த கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

மேலும் உடல்கள் மோசமான நிலையில் காணப்பட்டதாக டாடாநகர் சந்திப்பு கண்காணிப்பாளர் அபிஷேக் சிங்கால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தை கடக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

பலியானவர்களில் 2 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதுவரை யாரும் உடல்களுக்கு உரிமை கோரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.