பேருந்து நிலையத்தில் தூங்கிய தாய், கடத்தப்பட்ட குழந்தை!

ஒடிசா மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயிடமிருந்து 9 மாதக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடமிருந்து 9 மாதக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவனுடன் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய பெண், இரண்டு நாள்களாக பேருந்து நிலையத்தில் தங்கி வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பேருந்து நிலையத்தில் தூங்கியெழுந்தபோது குழந்தை காணாமல் போனதை கவனித்த தாய், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குழந்தையைக் கடத்திய 45 வயது பெண்ணைக் கைது செய்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போன குழந்தை அந்த பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர்களுக்கு அப்பால், புவனேஸ்வரில் கண்டுபிடிக்கப்பட்டது. 

சிசிடிவி காணொலிகள் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடித்ததாகவும், குற்றவாளியின் சகோதரி வீட்டில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com