ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடமிருந்து 9 மாதக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவனுடன் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய பெண், இரண்டு நாள்களாக பேருந்து நிலையத்தில் தங்கி வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையத்தில் தூங்கியெழுந்தபோது குழந்தை காணாமல் போனதை கவனித்த தாய், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குழந்தையைக் கடத்திய 45 வயது பெண்ணைக் கைது செய்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜன.19 முதல் ஜன.26 - விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?
காணாமல் போன குழந்தை அந்த பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர்களுக்கு அப்பால், புவனேஸ்வரில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவி காணொலிகள் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடித்ததாகவும், குற்றவாளியின் சகோதரி வீட்டில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தும்: ஏ.செல்லக்குமாா்

பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


