ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜன.19 முதல் ஜன.26 - விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?

தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நாள்கள் மற்றும் நேரம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2024, 9:34 am

DIN

நாட்டின் குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தில்லி பன்னாட்டு விமான நிலையம், விமான சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் ஜன.19 முதல் ஜன.26 வரை குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களுக்குத் தரையிறங்க மற்றும் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 10.20 மணி முதல் பிற்பகல் 12.45 வரை விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு நாளின் கொண்டாடத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தங்களின் மாற்றியமைக்கப்பட்ட விமான நேரத்தை விமான நிறுவனங்களில் தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜன.26 காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தில்லி விமான நிலையத்தில் எந்தவித விமான சேவையும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ விமானங்கள், எல்லை பாதுகாப்பு படை விமானங்கள், மாநில அரசின் முதல்வர்கள், ஆளுநர்கள் பயன்படுத்தும் விமானங்கள்/ ஹெலிகாப்டர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

இந்தாண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.