கடலில் உள்ள ஈரானின் கப்பல்களிலிருந்து கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மீதான தடைகள் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நடுக்கடலில், ஈரானின் கப்பல்களில் ஏற்கனவே உள்ள கச்சா எண்ணெய், பிற பெட்ரோலிய பொருள்களை விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போர் தொடங்கி கடந்த இரண்டு வாரங்களில், ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, மார்ச் 20ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், ஈரான் மீது அமெரிக்கா - ஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, உலகளவில் எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், நடுக்கடலில் நிற்கும் ஈரான் நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களில் இருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிபொருள்களை உலக நாடுகளுக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷிய நாட்டிடமிருந்து, கச்சா எண்ணெய் வாங்கவும் அமெரிக்கா வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், ஈரானிடமிருந்தும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கச்சா எண்ணெய் வாங்க அனுமதி வழங்கியிருக்கிறது.
இது அனுமதி தற்காலிகமானதுதான் என்பதையும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
