ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஈரானுடனான போா் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதைக் கருத்தில் கொண்டு, உக்ரைன் மீது போா் தொடுத்த ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடையை தளா்த்திய அமெரிக்கா, ரஷியாவிடம் 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தற்காலிக அனுமதி அளித்தது. இந்தத் தடையில் இருந்து மேலும் சில நாடுகளுக்கும் அமெரிக்கா விலக்களித்திருந்த நிலையில், அது ஏப்.11-ஆம் தேதியுடன் காலாவதியானது.
இந்நிலையில் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் பேசிய ஸ்காட் பெசன்ட், ‘ரஷியா மற்றும் ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அமெரிக்கா நீட்டிக்காது’ என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

