டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஒன்றரை வயது குழந்தையைக் கடித்துக் குதறிய பிட்புல் நாய்: மீட்கப் போராடும் விடியோ 

தில்லியின் புராரி பகுதியில் ஒன்றரை வயது குழந்தையை பிட்புல் நாய் கடித்து குதறிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

News image
Updated On :20 ஜனவரி 2024, 9:24 pm IST

தில்லியின் புராரி பகுதியில் ஒன்றரை வயது குழந்தையை பிட்புல் நாய் கடித்து குதறிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

உரிமையாளருடன் தெருவில் நடந்து சென்ற பிட்புல் நாய் திடீரென அங்கிருந்த ஒன்றரை வயது குழந்தையைக் கடித்துள்ளது. அருகிலிருந்த அக்குழந்தையின்  குடும்பத்தினர் நாயிடம் இருந்து குழந்தையை மீட்க எவ்வளவோ முயன்றும் அந்த நாய் குழந்தையை விடாமல் கடித்து இழுத்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தைக்கு 18 தையல்கள் போடப்பட்டுள்ளது. 

மேலும் அந்தக் குழந்தை 17 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. குடும்பத்தினரின் கண்முன்னே குழந்தையை நாய் கடித்த இந்த சம்பவம் ஜனவரி 2ம் தேதி நடந்துள்ளது. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த விடியோவில் எட்டு பேர் வரை அந்நாயிடம் இருந்து குழந்தையை மீட்கப் போராடுகின்றனர். இருப்பினும் அந்த நாய் குழந்தையை கடிப்பதை நிறுத்தவில்லை.

அந்த நாயின் உரிமையாளரே அதனை அடித்து இழுத்தும்கூட, அவரின் பேச்சை அந்த நாய் சிறிதும் கேட்காமல் குழந்தையை கடிக்கிறது. சில நிமிடங்கள் நாயிடம் போராடிய குடும்பத்தினர் ஒருவழியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர். 

இந்த சம்பவம் குறித்து புராரி காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது அதனை ஏற்க காவல்துறையினர் மறுத்துள்ளனர். அக்குழந்தையின் குடும்பத்தினர் விடியோ காட்சிகளை சமர்ப்பித்தும் கூட வழக்கு பதிய மறுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். 

பிட்புல் நாய் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாய் வகையைச் சேர்ந்ததாகும். இந்த வகை நாய்கள் அதன் உரிமையாளரையே கடித்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.