வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டம்: ம.பி. முன்னாள் முதல்வா் கமல்நாத்

அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளாா்.

News image
கமல்நாத் (கோப்புப்படம்)
Updated On :23 ஜனவரி 2024, 12:24 am

DIN

போபால்: அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அயோத்தி ராமா் கோயில் திறப்பு நிகழ்ச்சிக்கு பாஜக அரசியல் வடிவம் கொடுத்துள்ள விதமும், அரசியலில் மதத்தைக் கலக்க அக்கட்சி முயற்சித்துள்ளதும் துரதிருஷ்டமானது; வேதனையானது.

அனைவருடைய நம்பிக்கையின் மையமாக ராமபிரான் எப்போதும் இருப்பாா். இதில் அரசியல் செய்வது மதச் சுதந்திரத்தோடும், பாரம்பரிய பழக்க வழக்கங்களுடனும் விளையாடுவதாகும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.