கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஸ்ஸாம் முதல்வரின் 'ரிமோட்' மோடியின் கையில்!: ராகுல் காந்தி

அஸ்ஸாம் முதல்வரை பிரதமர் மோடி 'ரிமோட் கன்ட்ரோல்' செய்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :24 ஜனவரி 2024, 12:59 pm

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை, மோடி 'ரிமோட் கன்ட்ரோல்' செய்கிறார் என விமர்சித்துள்ளார். 

கூட்டத்தில் பேசிய ராகுல், 'அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 'ரிமோட் கன்ட்ரோல்' செய்கிறார்கள். சர்மா அஸ்ஸாமின் முன்னேற்றத்திற்காக ஏதேனும் பேசினால், அவரை தூக்கி எரிந்துவிடுவார்கள்' எனக் கூறியுள்ளார். 

மேலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி, பாஜக-வின் பி-டீம் (B-team) என விமர்சித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவையும், ஏஐயுடிஎஃப் (AIUDF)-யும் தோற்கடித்து காங்கிரஸ் வெற்றிபெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.