அஸ்ஸாம் முதல்வரின் 'ரிமோட்' மோடியின் கையில்!: ராகுல் காந்தி

அஸ்ஸாம் முதல்வரை பிரதமர் மோடி 'ரிமோட் கன்ட்ரோல்' செய்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை, மோடி 'ரிமோட் கன்ட்ரோல்' செய்கிறார் என விமர்சித்துள்ளார். 

கூட்டத்தில் பேசிய ராகுல், 'அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 'ரிமோட் கன்ட்ரோல்' செய்கிறார்கள். சர்மா அஸ்ஸாமின் முன்னேற்றத்திற்காக ஏதேனும் பேசினால், அவரை தூக்கி எரிந்துவிடுவார்கள்' எனக் கூறியுள்ளார். 

மேலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி, பாஜக-வின் பி-டீம் (B-team) என விமர்சித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவையும், ஏஐயுடிஎஃப் (AIUDF)-யும் தோற்கடித்து காங்கிரஸ் வெற்றிபெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com