காய்ச்சல் வருமென உணர்கிறேன்: கார் விபத்து குறித்து மம்தா பானர்ஜி! 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கார் விபத்து குறித்து பேசியுள்ளார். 
படம்: ஏஎன்ஐ | எக்ஸ்
படம்: ஏஎன்ஐ | எக்ஸ்
Published on
Updated on
1 min read

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பர்த்மானில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அங்கு மக்களை சந்தித்து பேசியப்பிறகு கொல்கத்தாவுக்கு சாலை வழியாகத் திரும்பும் போது, அவரது கார் விபத்தில் சிக்கியது. 

இதில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டரில் திரும்பவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மம்தா பானர்ஜியின் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.  

இந்நிலையில் விபத்து குறித்து மம்தா பானர்ஜி, “எனக்கு காய்ச்சல் வருமென உணர்கிறேன். குளிராகவும் இருக்கிறது. எனது காருக்கு முன்பாக வேகமாக ஒரு வாகனம் வந்தது. அது மிகவும் வேகமாக வந்தது. ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி தப்பித்தேன். இதனால் நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதன் வேலைகளை பார்க்கிறது. நான் மருத்துவமனைக்கு செல்லமாட்டேன். குளிராக இருப்பதால் வீட்டிற்கு செல்கிறேன்” எனக் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com