பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவை போல செயல்பட்டு வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவை போல பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் இணைந்து அரசியலமைப்பை சிதைக்க சதி செய்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதையும் படிக்க | மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி
குடியரசு தினத்தை முன்னிட்டு, கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (ஜன.26) தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அரசியலமைப்பு இல்லையென்றால் ஜனநாயகத்தை நம்மால் காப்பாற்ற முடியாது. கடின முயற்சியால், நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களும், அரசியலமைப்பு சபை உறுப்பினர்களும் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பை வழங்கினர்.
இந்திய அரசியலமைப்பை சிதைத்து, அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சதி செய்து வருகின்றன. நமது சுயாட்சி அமைப்புகளை ஒவ்வொன்றாக அழிப்பதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | நீதிபதி பி.பி.வராலே பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்
குறிப்பாக மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பொம்மையாக நடந்து கொள்கிறார். பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை நீதித்துறை மற்றும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.