ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பல பகுதிகளில் இன்று அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த சங்கரியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாக பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் வறண்ட வானிலையே நிலவுவதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் மிதமான முதல் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. அதே நேரத்தில் மேற்கு ராஜஸ்தானில் பல பகுதிகளில் குளிர் பதிவானது.
சங்ரியாவில் 3.1 டிகிரி, கங்காநகரில் 4.4 டிகிரி, ஆல்வாரில் 5.0 டிகிரி, சிரோஹியில் 6.4 டிகிரி, பன்ஸ்வாராவில் 6.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஜெய்ப்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.6 டிகிரியாக பதிவானது.