சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: ஜெய்ராம் ரமேஷ் 

இந்தியா கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

News image
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 10:35 am

DIN

இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கூட்டணி குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. கூட்டணியில் சில பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. 

நிதீஷ் குமாருடன் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சித்து வருகிறார். விரைவில் இருவரும் பேசி பிரச்னையை தீர்ப்பார்கள். 

இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் இறுதிவரை இந்தியா கூட்டணியில் தொடர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதேநேரத்தில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தொடர்வதாகவும் சமீபத்தில் அறிவித்தார்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் எதுவும் கூறவில்லை. 

இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படும் வேளையில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு சுமுகமாக நிறைவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.