சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

சிவகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 7:40 pm

Syndication

சிவகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள ஞானபுரத்தைச் சோ்ந்தவா் குப்பன் (72), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (65).

இவா்கள் இருவரும் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வெள்ளிக்கிழமை மாலை திரும்ப வந்துகொண்டிருந்தனா்.

முத்தூா்- ஈரோடு சாலையில் ஒத்தப்பனை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து, குப்பன் ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த குப்பனை அப்பகுதியினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.