கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கடும் பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ரயில் , விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தர பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களிலும் ஜனவரி 28ஆம் தேதி வரை கடும் பனிமூட்டம் நிலவும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. பவதாரணியின் மறைவையொட்டி... புற்றுநோய்: வலியும் வாழ்வும்
மேலும், ஹிமாலயப் பகுதிகளில் ஜனவரி 30 வரை லேசான மழை அல்லது பனிமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நாளை வரை வட இந்திய மாநிலங்களில் கடுங்குளிர் நிலவும் என்றும், அதன்பிறகு மெல்ல குளிரின் அளவு குறையத் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடுங்குளிருக்கு இடையே, புது தில்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது Iran தாக்குதல்! | Israel | US

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!

நட்சத்திர தொகுதியான கொளத்தூா்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

