மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதல்: 4 மாணவர்கள் பலி,  8 பேர் காயம்

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதியதில் மாணவி உள்பட 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 7:32 am

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதியதில் மாணவி உள்பட 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவை முடிந்து மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் பயணித்த பேருந்து அழகூர் கிராமம் அருகே இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தபோது டிராக்டருடன் மோதியது. 

இந்த சம்பவத்தில் மாணவி உள்பட 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தில் சிக்கிய மாணவர்கள் அழகூரில் உள்ள வர்த்தமானா கல்வி நிறுவனத்தில் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.