புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி முதல்வருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வருக்கு புதிய சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
அரவிந்த் கேஜரிவால் | கோப்பு
Updated On :31 ஜனவரி 2024, 9:31 am

DIN

மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது மத்திய அமலாக்கத்துறை.

முந்தைய நான்கு சம்மன்களையும் அரவிந்த கேஜரிவால் தவிர்த்த நிலையில், இந்த புதிய சம்மன் பிப்.2 ஆம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜன.13 அன்று நான்காவது சம்மன் ஜன.18-ம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டது.

அந்த தேதிகளில் தில்லி  முதல்வர் கோவாவுக்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்தார்.

வருகிற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள கோவாவில் கட்சி உறுப்பினர்களைச் சந்திக்க அவர் சென்றதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

மேலும், தனது தரப்பில் அனுப்பிய பதில் மனுக்களை அமலாக்கத்துறை பொருட்படுத்தவில்லை என்றும் அதற்கு பதிலாக புதிய சம்மன்களைப் பிறப்பிப்பதாகவும் அரவிந்த கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.