மாநிலங்களவையில் மோடி உரைக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் அமளி, வெளிநடப்பு!

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என அமளி.
எதிர்க்கட்சிகள் அமளி
எதிர்க்கட்சிகள் அமளி
Published on
Updated on
1 min read

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்காததை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்.. எதிர்க்கட்சித் தலைவர் என்றும், பொய் சொல்வதை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கினர்.

எதிர்க்கட்சிகள் அமளி
“இது வெறும் ஆரம்பம்தான்...”: மாநிலங்களவையில் மோடி உரை

இதனைத் தொடர்ந்து, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com