கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விண்வெளி செல்லும் முன், பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும்! ஜெய்ராம் ரமேஷ்

மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நாட்டுக்கே பெருமை என்று இஸ்ரோ தெரிவித்திருந்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2024, 7:02 am

DIN

விண்வெளி செல்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு ககன்யான் திட்டம் குறித்து சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அனுப்புவீர்களா என்று சோம்நாத்திடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த சோம்நாத், பிரதமரை விண்வெளிக்கு அனுப்புவதில் எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ககன்யான் திட்டத்தின் பாதுகாப்புத் தன்மை ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட பிறகே முக்கிய பிரமுகர்களை இந்த திட்டத்தில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பான செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “விண்வெளிக்கு செல்லும் முன், 'நான் - பயலாஜிகல்’ பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ககன்யான் திட்டத்தின் முதல் பயணம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ள குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு பேரையும் பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.