மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நானா படோலே தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்), காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (மகாராஷ்டிர வளா்ச்சி முன்னணி) என்ற பெயரில் கூட்டணியில் உள்ளன. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் அந்தக் கூட்டணி 30 தொகுதிகளில் வென்றது.
இந்நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தோ்தல் தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயாராவது தவறல்ல. இதை காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் செய்து வருகின்றன. எனினும் மகா விகாஸ் அகாடி கூட்டணியாகவே தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும்’ என்றாா்.
டிரெண்டிங்

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

கோபியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்

பேரவைத் தோ்தல்: திமுக சாா்பில் போட்டியிட 15,372 போ் விருப்ப மனு

ஹரியாணா தோ்தலில் வாய்ப்பு வழங்க ரூ.7 கோடி லஞ்சம் பெற முயற்சி- சோனியா குடும்பம் மீது பாஜக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

