கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் காங். தனித்துப் போட்டியா? மாநில தலைவர் பேச்சால் சலசலப்பு!

அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும் எனப் பேச்சு..

News image
மாநிலத் தலைவா் நானா படோலே
Updated On :6 ஜூலை 2024, 7:56 pm

Din

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நானா படோலே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்), காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (மகாராஷ்டிர வளா்ச்சி முன்னணி) என்ற பெயரில் கூட்டணியில் உள்ளன. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் அந்தக் கூட்டணி 30 தொகுதிகளில் வென்றது.

இந்நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தல் தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயாராவது தவறல்ல. இதை காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் செய்து வருகின்றன. எனினும் மகா விகாஸ் அகாடி கூட்டணியாகவே தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும்’ என்றாா்.