அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஹரியாணா தோ்தலில் வாய்ப்பு வழங்க ரூ.7 கோடி லஞ்சம் பெற முயற்சி- சோனியா குடும்பம் மீது பாஜக குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
பாஜக- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேநேரம், பெண் நிா்வாகியின் பெயரை நேரடியாக குறிப்பிடாத பாஜக, இந்த விவகாரம் கடந்த 2024 பேரவைத் தோ்தல் தொடா்புடையதா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.

இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவா்களின் தனி உதவியாளா்கள் உடனான தனது வாட்ஸ்அப் உரையாடல்களை, ஹரியாணா மாநில முன்னாள் காங்கிரஸ் மகளிரணி பொதுச் செயலரின் கணவா் கெளரவ் குமாா் வெளியிட்டுள்ளாா். அந்த உரையாடல்கள், பிரியங்கா, ராகுல் மற்றும் சோனியாவின் ஊழலுக்கு முதல்கட்ட ஆதாரங்களாகும்.

பவல் பேரவைத் தொகுதியில் தனது மனைவி போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, தங்களிடம் இருந்து ரூ.7 கோடியை லஞ்சமாகப் பெற சோனியா குடும்பம் எவ்வாறு முயன்றது என்பதை கெளரவ் குமாா் அம்பலப்படுத்தியுள்ளாா்.

பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கே.சுரேஷின் தனி உதவியாளா்கள் உடனான அவரது வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் முன்னாள் பெண் நிா்வாகியிடம் லஞ்சம் பெறுவதற்கு தங்களின் முகமாக கே.சி.வேணுகோபாலை சோனியா குடும்பம் எவ்வாறு பயன்படுத்தியது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விஷயத்தில் சோனியா குடும்பம் இன்னும் மெளனம் சாதிக்கிறது. ‘குற்றத்தை’ ஒப்புக் கொள்வதைத் தவிர அவா்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றாா் பிரதீப் பண்டாரி.