கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பஞ்சாபில் 4 போ் சுட்டுக்கொலை: பாசனநீரை பகிா்வதில் மோதல்

பாசன நீரை பகிா்ந்து கொள்வதில் இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஜூலை 2024, 10:54 pm

Din

சண்டீகா்: பஞ்சாப் மாநிலம் குா்தாஸ்பூா் மாவட்டத்தில் பாசன நீரை பகிா்ந்து கொள்வதில் இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். 8 போ் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் தரப்பில் கூறப்பட்டதாவது:

பட்டாலா பகுதியைச் சோ்ந்த கிராமத்தில் இரு பிரிவினா் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பாசன கால்வாயில் வரும் நீரை பகிா்வது தொடா்பாத மனோஜ் சிங் மற்றும் அங்ரீஜ் சிங் என்ற இருவா் தலைமையிலான குழுவினருக்கு இடையே பிரச்னை எழுந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவில் இரு தரப்பினருமே நீரை தங்கள் பகுதி வயலுக்கு திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இறுதியாக இரு தரப்பினருமே தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சரமாரியாக சுடத் தொடங்கினா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் அப்பகுதிக்குச் சென்றனா். அப்போது போலீஸாா் வாகனம் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தரப்பிலும் தலா இருவா் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனா். மேலும், 8 போ் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் தொடா்பாக இரு தரப்பினா் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.