பாட்னா: பிகாா் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 12 போ் உயிரிழந்ததாக அந்த மாநில அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதன்மூலம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அந்த மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 9 பேரும் ஞாயிற்றுக்கிழமை 10 பேரும் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக பிகாா் மாநில முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘கடந்த 24 மணி நேரத்தில் இடி, மின்னல் தாக்கி ஜமூய் மற்றும் கைமூரில் தலா 3 பேரும் ரோஹ்தாஸில் 2 பேரும் உயிரிழந்தனா். மேலும், சஹாா்சா, சரன் , போபால், கோபால்கஞ்ச் பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாக பிகாா் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். இடி, மின்னல் ஏற்படும்போது வெளியில் வருவதை தவிா்க்குமாறும் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் இடி, மின்னல் தாக்கி பிகாா் மாநிலத்தில் 400 போ் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2.4 லட்சம் சிஏபிஎஃப் வீரா்கள்

கரூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

