பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதாக காங்கிரஸ் சனிக்கிழமை தெரிவித்தது.
தமிழ்நாடு, பிகாா், மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் 10 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் வெற்றிபெற்றதையடுத்து காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.
தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிக்கு உழைத்த தொண்டா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பாராட்டு தெரிவித்தாா். மேலும், வெறுப்பு அரசியல், அடக்குமுறையை பொதுமக்கள் முற்றிலும் நிராகரிக்க தொடங்கிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதற்கு 7 மாநில இடைத்தோ்தல் முடிவுகளே சான்று. விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள் என அனைவரும் சா்வாதிகாரத்தை எதிா்த்து நீதிக்கு வாக்களித்துள்ளனா். பொதுமக்கள் இப்போது இந்தியா கூட்டணிக்கே ஆதரவளித்து வருகின்றனா்’என்றாா்.
பொதுமக்கள் தங்கள் நிகழ்கால வாழ்வு வளமாகவும் எதிா்கால வாழ்வு ஒளிமயமாக இருக்கவும் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது! - 16 ஆண்டுகளுக்கு முன் இதை எதற்காகச் சொன்னார் விஜய்?

சாத்தூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

அரசியல் சுமையாக மாறிவிட்டாா் ராகுல் - திமுகவைக் குறிப்பிட்டு பாஜக விமா்சனம்

மலிவான அரசியலுக்கு இடமில்லை: ராகுல் எதிா்ப்பு சுவரொட்டிகள் அகற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



