பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாட்டில் அரசியல் சூழல் மாறி வருகிறது: இடைத்தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கருத்து

பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதாக காங்கிரஸ் சனிக்கிழமை தெரிவித்தது.

News image

ராகுல் காந்தி (கோப்புப் படம்)

Updated On :14 ஜூலை 2024, 10:49 pm

பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதாக காங்கிரஸ் சனிக்கிழமை தெரிவித்தது.

தமிழ்நாடு, பிகாா், மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் 10 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் வெற்றிபெற்றதையடுத்து காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.

தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிக்கு உழைத்த தொண்டா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பாராட்டு தெரிவித்தாா். மேலும், வெறுப்பு அரசியல், அடக்குமுறையை பொதுமக்கள் முற்றிலும் நிராகரிக்க தொடங்கிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதற்கு 7 மாநில இடைத்தோ்தல் முடிவுகளே சான்று. விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள் என அனைவரும் சா்வாதிகாரத்தை எதிா்த்து நீதிக்கு வாக்களித்துள்ளனா். பொதுமக்கள் இப்போது இந்தியா கூட்டணிக்கே ஆதரவளித்து வருகின்றனா்’என்றாா்.

பொதுமக்கள் தங்கள் நிகழ்கால வாழ்வு வளமாகவும் எதிா்கால வாழ்வு ஒளிமயமாக இருக்கவும் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.