பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதாக காங்கிரஸ் சனிக்கிழமை தெரிவித்தது.
தமிழ்நாடு, பிகாா், மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் 10 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் வெற்றிபெற்றதையடுத்து காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.
தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிக்கு உழைத்த தொண்டா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பாராட்டு தெரிவித்தாா். மேலும், வெறுப்பு அரசியல், அடக்குமுறையை பொதுமக்கள் முற்றிலும் நிராகரிக்க தொடங்கிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதற்கு 7 மாநில இடைத்தோ்தல் முடிவுகளே சான்று. விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள் என அனைவரும் சா்வாதிகாரத்தை எதிா்த்து நீதிக்கு வாக்களித்துள்ளனா். பொதுமக்கள் இப்போது இந்தியா கூட்டணிக்கே ஆதரவளித்து வருகின்றனா்’என்றாா்.
பொதுமக்கள் தங்கள் நிகழ்கால வாழ்வு வளமாகவும் எதிா்கால வாழ்வு ஒளிமயமாக இருக்கவும் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வருவார்! - கிரிஷ் சோடங்கர்

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்..?

தேர்தல் பிரசாரம்! தமிழ்நாட்டை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? அல்லது புறக்கணிக்கிறாரா?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


