விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத ரீதியான இடங்களில் பாஜக தொடர் தோல்வி: இந்தியா கூட்டணி

மக்களவைத் தேர்தல் உள்பட தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் மதம் தொடர்புடைய இடங்களில் பாஜக தோல்வி.

News image

மமதா பானர்ஜி / ராகுல் காந்தி - ANI

Updated On :14 ஜூலை 2024, 11:43 am

மக்களவைத் தேர்தல் உள்பட தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் மதம் தொடர்புடைய இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதாக சமாஜவாதி கட்சி விமர்சித்துள்ளது.

7 மாநிலங்களிலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், இந்தியா கூட்டணி 10 இடங்களிலும் (காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, திமுக -1, ஆம் ஆத்மி -1) பாஜக 2 இடங்களிலும், சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து சமாஜவாதி கட்சியின் மூத்த எம்.பி. ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளதாவது, மக்களவைத் தேர்தல் உள்பட மத ரீதியான அனைத்து இடங்களிலும் பாஜகவவை மக்கள் தோல்வி அடையச் செய்துள்ளனர். அயோத்தி நகரம் உள்ள மக்களவைத் தொகுதியான ஃபைசாபாத், சீதாபூர், சித்திரகூட், நாசிக், ராமேஸ்வரம் உள்ளிட்ட மத ரீதியான அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. கடவுள் ராமரும் பாஜகவை புறக்கணித்துள்ளார் என ராம் கோபால் யாதவ் குறிப்பிட்டார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மனோஜ் ஜா, இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம். மற்றொரு தொகுதியில் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை, இதே எண்ணிக்கைதான். அதுவும் அவர் சமீபத்தில்தான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்..

ஆட்சியானது, இனிமேலாவது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், பொது நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் நம்புகிறேன். நாட்டின் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை. அது குறித்து அவர்கள் (பாஜக) ஒருபோதும் பேசுவதில்லை என மனோஜ் ஜா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.