அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருமணத்திற்கு சென்றவர்கள் மின்சாரம் தாக்கி பலி!

இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் பலி

News image
Updated On :15 ஜூலை 2024, 10:40 am

DIN

ஜார்க்கண்டில் திருமணத்திற்கு சென்ற பேருந்து விபத்துள்ளானதால் நான்கு பேர் பலியாகினர்.

ஜார்க்கண்டின் தமாரில் உள்ள சோககுட்டு கிராமத்தில் நடக்கவிருந்த திருமணத்திற்கு சுமார் 90 பேர் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது, பேருந்தின் இருக்கைகள் முழுதும் நிரப்பப்பட்டதால், சிலர் பேருந்தின் கூரை மேல் அமர்ந்து பயணித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பேருந்து சென்ற வழியில் இருந்த உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராத விதமாக உரசியுள்ளது. இதனால், பேருந்தின் கூரை மேல் பயணித்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், உடன் பயணித்த பலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பயணித்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.