பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

News image

எஸ்.ஜெய்சங்கா்

Updated On :19 ஜூலை 2024, 9:25 pm

Din

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ரஷியாவுக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இதுதொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்’ என குறிப்பிட்டாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி கடந்த ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது அந்நாட்டு அதிபா் புதினைச் சந்தித்த அவா், எவ்வித பிரச்னைக்கும் போா் தீா்வல்ல எனவும் போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டாா்.

ஆனால் அவரின் ரஷிய பயணத்துக்கு கண்டனம் தெரிவித்த ஸெலன்ஸ்கி, ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் பிரதமா் உலகின் கொடூர கொலைக் குற்றவாளியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது’ என தெரிவித்தாா்.