கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு: ஒடிசாவில் மிகக் கனமழை
கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒடிசாவில் மிகக் கனமழை பெய்து வருகிறது.


வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக உருவாகி, இன்று காலை கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.
ஒடிசாவுக்கு அருகே சிலிகா ஏரி என்ற பகுதியில் இன்று காலை தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், சித்திரகொண்டா பகுதிகளில் பலத்த மழை பெய்திருபப்தாகவும், இங்கு 220 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகவும், கோர்குண்டாவில் 217 மி.மீ. மழை பதிவாகியருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, தாழ்வுப்பகுதியானது புரியிலிருந்து தெற்கு - தென்மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.
இதன் காரணமாக, ஒடிசாவில் சனிக்கிழமை கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...