மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு: ஒடிசாவில் மிகக் கனமழை

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒடிசாவில் மிகக் கனமழை பெய்து வருகிறது.

News image

ஒடிசாவில் கனமழை

Updated On :20 ஜூலை 2024, 7:20 am

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக உருவாகி, இன்று காலை கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.

ஒடிசாவுக்கு அருகே சிலிகா ஏரி என்ற பகுதியில் இன்று காலை தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், சித்திரகொண்டா பகுதிகளில் பலத்த மழை பெய்திருபப்தாகவும், இங்கு 220 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகவும், கோர்குண்டாவில் 217 மி.மீ. மழை பதிவாகியருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, தாழ்வுப்பகுதியானது புரியிலிருந்து தெற்கு - தென்மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதன் காரணமாக, ஒடிசாவில் சனிக்கிழமை கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.