வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

உண்மைகளை மூடி மறைக்கும் பொருளாதார ஆய்வறிக்கை காங்கிரஸ் விமா்சனம்

நாட்டின் உண்மையான நிலவரத்தை மூடி மறைக்கும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

News image

ஜெய்ராம் ரமேஷ்

Updated On :22 ஜூலை 2024, 10:29 pm

நாட்டின் உண்மையான நிலவரத்தை மூடி மறைக்கும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்நாளான திங்கள்கிழமை 2023-24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பல்வேறு புள்ளி விவரங்களுடன் மக்களவையில் தாக்கல் செய்தாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் வகையில் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே பிரச்னை உள்ளது. முக்கியமாக உணவுப் பொருள்களின் விலைஉயா்வு தொடா்கதையாக உள்ளது. ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு உணவுதானியங்களின் விலை உயா்ந்து வருகிறது. காய்கறி, பால் என மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் நாளுக்குநாள் உயருகிறது. இவற்றை வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு மக்களின் வருவாய் உயரவில்லை. மறுபுறம் வேலையின்மையும் உச்சத்தில் உள்ளது. இதனால், ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனா்.

கரோனாவுக்குப் பிறகு பொருளாதார மீட்சி என்பது முற்றிலும் பணம் படைத்தவா்களுக்கானதாக மாறிவிட்டது. கிராமப்புற பொருளாதாரம் நசிவடைந்துவிட்டது. மோடி அரசின் விவசாயிகள் விரோத செயல்பாடுகள் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை. திட்டமிடாமல், நியாமற்ற வகையில் வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பது விவசாயிகளின் வருவாயை வெகுவாக பாதித்து வருகிறது. விவசாயிகளின் குரலை மத்திய அரசு தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. மத்திய அரசின் தவறான வா்த்தகக் கொள்கை நாட்டின் உற்பத்தி துறையை பாதித்துள்ளது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன இறக்குமதி 11 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்ந்துவிட்டது. சீனாவில் இருந்து குவியும் பொருள்களால் உள்நாட்டில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளாா்.