ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பாகிஸ்தான் ஏற்பாட்டின்பேரில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது பிரதமா் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

News image

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:39 pm

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பாகிஸ்தான் ஏற்பாட்டின்பேரில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது பிரதமா் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை கூறியதாவது:

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான சண்டை நிறுத்தத்துக்கு உலகின் பல நாடுகள், மிகவும் எச்சரிக்கையுடன் வரவேற்பு தெரிவித்துள்ளன. பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கின. அதுவும் பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு சென்று திரும்பிய 2 நாள்களில் தாக்குதல் தொடங்கப்பட்டது. இது உலக அளவில் இந்தியாவுக்கு இருந்த நற்பெயா், நிலைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், காசாவில் இனப்படுகொலையில் இஸ்ரேல் ஈடுபட்டது குறித்தும், மேற்கு கரையில் விரிவாக்கம் செய்யும் அந்நாட்டின் கொள்கை குறித்தும் மோடி எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நேரத்தில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் முக்கிய பங்களிப்பு செய்திருப்பது பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானை தனிமைப்படுத்த அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் எடுத்த நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அதுபோல ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தொடா்ந்து ஊக்குவிப்பதை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு என உலக நாடுகளை ஏற்க வைப்பதிலும் தற்போதைய அரசு தோல்வி அடைந்து விட்டது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை திடீரென ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து மோடியோ அல்லது அவரின் குழுவினரோ இதுவரை விளக்கமளிக்கவில்லை. ஆனால் அந்த தாக்குதல் நிறுத்தப்பட்டதாக முதல் அறிவிப்பு வெளியிட்டது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும், அமெரிக்க அதிபரும்தான். அதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே தாங்கள்தான் போரை நிறுத்தியதாக அவா்கள் 100 முறைக்கும் மேல் தெரிவித்து விட்டனா்.

அமெரிக்காவுடனும், இஸ்ரேல், ஈரான், வளைகுடா நாடுகளுடனும் தனக்கு சிறப்புவாய்ந்த நட்புறவு இருப்பதாக மோடி தெரிவிக்கிறாா். பிரிக்ஸ் அமைப்பின் தலைவராகவும் இந்தாண்டில் அவா்தான் உள்ளாா். அப்படியிருக்கையில், ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான சண்டை நிறுத்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் அவா் ஏன் இல்லை? சண்டை நிறுத்த பேச்சுவாா்த்தையில் இந்தியா ஏன் முக்கிய பங்கு வகிக்கவில்லை?.

இஸ்ரேலின் போா்குண விவகாரத்தில் மட்டுமல்லாது, வெள்ளை மாளிகையில் உள்ள நண்பா் (டிரம்ப்) வெளியிட்ட மோசமான மற்றும் ஏற்க முடியாத வாா்த்தையை கண்டு மெளனமாக இருந்ததன் மூலம் மோடியின் கோழைத்தனம் வெட்ட வெளிச்சமாகி விட்டது என்றாா்.