நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா் என நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ரவி அகா்வால் கூறியதாவது: வருமான வரி செலுத்துவோருக்கு வரி செயல்முறைகளை எளிமைப்படுத்துவதே மத்திய அரசு மற்றும் நேரடி வரி வாரியத்தின் நோக்கமாகும். இது அதிகப்படியான மக்கள் வருமான வரி செலுத்த உதவும்.
2024-25-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட கால அவகாசம் வழக்கம்போல் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரியானது கடந்த நிதியாண்டின் அதே நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரியை விட கணிசமான அளவு அதிகமாக உள்ளது.
கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25-ஆம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது ஜூலை 22-ஆம் தேதி இரவே முறியடிக்கப்பட்டது.
நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா்.
கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும் வேலையில் சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிதி ஆண்டின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!

நீட் தோ்வு முறையை முழுமையாக ரத்து செய்ய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

நீட் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வா் விஜய்

அதிக வருமான வரி செலுத்துவதில் தோனி முதலிடம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

