திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள்?

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி..

News image

வருமான வரிக் கணக்கு தாக்கல் - IANS

Updated On :6 ஜூன் 2026, 12:53 pm IST

ஒருவர் பான் அட்டை வைத்திருந்தால், ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும், அவரது ஆண்டு வருவாய் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இதுதான் வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யும் நடைமுறை.

வரி செலுத்துகிறோமோ இல்லையோ, அனைவரும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி செலுத்தாதவர்கள் ஏன் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கருதலாம். ஆனால், வரி செலுத்த மட்டுமல்ல, இதனால் பல்வேறு நன்மைகளும் உண்டு.

ஐடிஆர் என்பது, வரி செலுத்துவது மட்டுமல்ல, மாத வருவாய் ஈட்டும் ஒவ்வொருவரும், தங்களது வருவாய் குறித்த கணக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதற்கான ஆவணமாகும்.

சரியான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து வருபவர்கள், ஏதேனும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் கடன் கோரும்போது எளிதாகக் கிடைக்கும்.

ஒருவரது வருமானத்துக்கு அதிகமாக வரிப் பிடித்தம் அல்லது டிடிஎஸ் பிடிக்கப்பட்டிருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்து அதிகப்படியாக செலுத்திய வரியைத் திரும்பப் பெறலாம்.

வருமானச் சான்றிதழ் இல்லாத, சுய தொழில் செய்பவர்கள், அமைப்பு சாரா பணியில் இருப்பவர்கள், சொந்தமாக நிறுவனம் நடத்துபவர்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ ஆவணமாக மாற்றுகிறது ஐடிஆர் கணக்குத் தாக்கல்.

பங்குச் சந்தை, சொத்து, தொழிலில் முதலீடு செய்து அது நட்டமடையும்போது, எதிர்காலத்தில் அவர்கள் அதே வழிகளில் லாபம் ஈட்டும்போது கூடுதல் வரி பிடித்தம் செய்யாமல், கணக்கு நேர் செய்யப்பட உதவுகிறது.

விசா விண்ணப்பங்களின்போது, முறையாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருந்தால் அவர்களுக்கு விசா எளிதாகக் கிடைக்கும்.

எவ்வளவு வருவாய் வருகிறது, வரி கட்ட வேண்டுமா என்பதை சரியாக தெரிந்து கொள்ளாமல், ஐடிஆர் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டால் அபராதம் செலுத்த நேரிடலாம். இதிலிருந்து தப்பிக்க ஆண்டுதோறும் ஐடிஆர் தாக்கல் செய்வது நல்லது.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-இன் கீழ், வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காகச் செலுத்தும் தவணைத் தொகைக்கு ரூ. 25,000 வரை வரி விலக்கு கோரலாம்.

மூத்த குடிமக்களுக்கு அதிக விலக்கு வரம்புகள் உள்ளன. வருமான வரி அறிக்கையின் (ITR) முக்கிய நன்மைகளில் ஒன்று, வரி செலுத்துவோர் மருத்துவக் காப்பீட்டு விலக்குகளைக் கோர அனுமதிப்பதாகும்.

எனவே அனைவரும் உரிய நேரத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது நல்லது.

Summary

What are the benefits of filing an income tax return?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.