நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லையா? ஐடிஆர்-யு வந்துவிட்டது!

ஒரு சில ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்காக ஐடிஆர்-யு கொண்டுவரப்பட்டுள்ளது.

News image

வருமான வரி - கோப்புப்படம்.

Updated On :12 ஜூன் 2026, 1:00 pm IST

ஒருவர் ஏதோ சில காரணங்களால், தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் விட்டிருந்தால், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் அபாயம் உள்ளது.

தற்போதிருக்கும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் நடைமுறைப்படி, ஒருவர், ஒரே ஒரு மற்றும் அந்தந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில், 2026 - 27ஆம் ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்யும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். முந்தைய ஆண்டுகளுக்கான வாய்ப்புகள் லாக் செய்யப்பட்டிருக்கும்.

எனவே, வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மறந்தவர்களுக்காகவே அப்டேட்டட் ஐடிஆர் (ஐடிஆர்-யு) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையைப் பயன்படுத்தி, ஒருவர் நான்கு ஆண்டுகள் வரை தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும்.

ஒருவர், இந்த வழிமுறையைப் பின்பற்றி, தவறிய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொள்ளலாம். அதாவது, 2022 - 23, 2023 - 24, 2024-25, 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.

அபராதம் செலுத்த வேண்டும்

இந்த அப்டேட்டட் ஐடிஆர் என்பது அபராதம் செலுத்தியே தாக்கல் செய்யும் முறையாகும். அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் செலுத்தும் வரி நிலுவைக்கும் வட்டி கணக்கிட்டு அபராதமாக செலுத்த வேண்டியது வரும். எத்தனை ஆண்டுகள் வரியை செலுத்தவில்லை, வரி எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு இந்த அபராதத் தொகை வசூலிக்கப்படும்.

ஐடிஆர்-யு பயன்படுத்தாவிட்டால்?

வருமான வரித்துறையே கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பினால், அபராதத் தொகை அதிகம்.

நாமே முன்வந்து ஐடிஆர்-யு மூலம், தவறவிட்ட வருமான வரிக் கணக்கை பூர்த்தி செய்து கொண்டால், குறிப்பிட்டால் குறைந்த அபராதத் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு செலுத்த வேண்டியது வரும். தவறினால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடலாம்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்படவில்லையே என்ற நெருடல் இல்லாமல் அபராதத்தை செலுத்தை அதனை பூர்த்தி செய்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம்.

நான்கு ஆண்டுகள் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, இதனை குறைந்த ஆண்டுகள் இருக்கும்போதே பயன்படுத்தி பலன்பெறுவது நல்லது.

Summary

Haven't filed your income tax return for several years? ITR-U is here!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.