பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனைகள்! வருமான வரித்துறை புதிய விதி!

ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் தகவல் தெரிவிக்குமாறு வருமான வரித்துறை புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

News image

வருமான வரித்துறை - File photo

Updated On :5 ஜூன் 2026, 3:58 pm IST

ஒரு தனிநபர், தன்னுடைய ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் எடுத்தாலோ அல்லது வரவு வைத்தாலோ அது குறித்து தெரிவிக்க வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருவர், தன்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் அளவுக்கு பணம் எடுப்பதோ அல்லது வரவு வைப்பதோ சட்டப்படி குற்றமல்ல. ஆனால், ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

எனவேதான், ஒரு நிதியாண்டுக்குள் ஒருவர் வங்கி அல்லது இதர நிதி நிறுவனங்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணப்பரிவர்த்னை செய்யும்போது அது குறித்து வருமான வரித்துறைக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்ற தொகைகளை வைப்பு அல்லது எடுக்கும்போது பான் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஒரே முறையில் ரூ.10 லட்சத்தை வரவு வைக்கவோ, எடுக்கவோ வேண்டும் என்று அவசியமில்லை, ஒரு நிதியாண்டுக்குள் ஒட்டுமொத்தமாக பல முறைகளில் வரவு அல்லது எடுத்தாலும் கணக்கில் கொள்ளப்படும்.

ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சத்தை வரவு அல்லது எடுக்கிறார் என்றால், அது ரூ.10 லட்சத்தை மீறும்போது, அது குறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆனால், ஒருவர் தன்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததற்காக தண்டிக்கப்படவோ, அபராதம் விதிக்கவோ, வரி செலுத்த வேண்டும் என்றோ நிர்பந்திக்கப்படாது.

வருமான வரித்துறை, இந்த தொகையை கணக்கில் வைத்துக் கொள்ளும். அவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, அவரது வருவாய், இந்தத் தொகையுடன் ஒத்துப்போகிறதா என்பதை கணக்கிட்டு அவருக்கு வரி விதிக்கும். அவ்வளவுதான்.

சிலர் குறைவான தொகை வருவாயாகக் காட்டி, வரி விலக்குப் பெற்றுத் தப்பித்துக் கொள்ளுவதிலிருந்து தடுக்க இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

Summary

Income Tax Department's new order if you withdraw money exceeding Rs. 10 lakhs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.