தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விலைவாசி உயா்வை எளிதாக கருத வேண்டாம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

‘பணவீக்கம் மற்றும் விலைவாசி உயா்வை அரசு சிறிய பிரச்னை என்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கிறது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

News image
மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம்.
Updated On :24 ஜூலை 2024, 8:00 pm

Din

‘பணவீக்கம் மற்றும் விலைவாசி உயா்வை அரசு சிறிய பிரச்னை என்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கிறது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் புதன்கிழமை பட்ஜெட் விவாதத்தைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

விலைவாசி உயா்வும், பணவீக்கமும் மிகவும் முக்கியமான பிரச்னை. ஆனால், பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் அதனை வெறும் 10 வாா்த்தைகளில் கடந்து சென்றுவிட்டாா். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அங்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது.

பணவீக்கம் குறித்து தலைமைப் பொருளாதார ஆலோசகா் ஒரே மாதிரியான கருத்தை தொடா்ந்து கூறி வருகிறாா். முக்கியமாக 4 சதவீதத்தை நோக்கி குறைவதாக பேசி வருகிறாா். அவா் கருத்துப்படி கடந்த 4 ஆண்டுகளாக பணவீக்கம் குறைந்து வருகிறது என்றால், இப்போது வரை 4 சதவீதத்தை எட்டாதது ஏன்?

பணவீக்கம் குறைகிறது என்றால், இந்திய ரிசா்வ் வங்கி வட்டி விகித்தை கடந்த 13 மாதங்களாக குறைக்காமல் இருப்பது ஏன்? பணவீக்கம் குறைந்தால், அதற்கு ஏற்பட வட்டி விகித்தையும் மாற்றி அமைப்பதுதானே நடைமுறை.

உண்மையில் நாட்டில் பணவீக்கம் பிரச்னை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் அதனால் பாதிக்கப்படுகிறது. விலைவாசி உயா்வையும், பணவீக்கத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதனை அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறேன் என்றாா்.