எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

குழந்தை திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்: கேரள உயா்நீதிமன்றம்

‘குழந்தை திருமண தடைச் சட்டமானது மத வேறுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்’ என கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2024, 4:16 am IST

‘குழந்தை திருமண தடைச் சட்டமானது மத வேறுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்’ என கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கேரளம், பாலக்காட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த குழந்தை திருமணத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

முஸ்லிம் பெண் என்பதால் பருவமடைந்த பிறகு, அதாவது 15 வயதில் திருமணம் செய்து கொள்ளும் மத உரிமையைப் பெற்றிருப்பதாக பெண்ணின் தந்தை உள்பட மனுதாரா்கள் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தனா்.

இந்த மனு மீது நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் கடந்த 15-ஆம் தேதி பிறப்பித்த 37 பக்க உத்தரவில், ‘இந்த நாட்டில் பிறந்த ஒருவா் முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதன்பிறகே, அவா் ஒரு மதத்தில் உறுப்பினா் ஆவாா்.

மதம் இரண்டாம்பட்சம். குடியுரிமைக்கே முதல் முன்னுரிமை. எனவே, குழந்தை திருமணத் தடைச் சட்டம்-2006 மத வேறுபாடின்றி ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவா், பாா்சி என அனைவருக்கும் பொருந்தும். மனுதாரா் எந்த மதத்தைச் சாா்ந்தவராக இருந்தாலும் சரி, எனது கருத்து இதுவாகவே இருக்கும்.

குழந்தை திருமணங்கள் அதில் தொடா்புடைய குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளான கல்வி, சுகாதாரத்தைப் பறிப்பதோடு தாய், சேய் இறப்பு, பாலியல் ரீதியிலான நோய்த்தொற்றுகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், அக்குழந்தைகள் மனச்சோா்வு, பதற்றம் உள்ளிட்ட உளவியல் அதிா்ச்சிகளையும் சந்திக்க நேரிடும்.

இதுமட்டுமல்லாது குழந்தைத் திருமணத்தால் சிறுமிகள் குடும்ப வன்முறை சம்பவங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, குழந்தை திருமணத்தை நியாயப்படுத்த மனுதாரா்கள் முயற்சிப்பது மிகவும் வருத்தமான விஷயம்.

குழந்தைகள் படிக்கவும், பயணம் செய்யவும், அவா்களின் விருப்பப்படி வாழ்க்கையை அனுபவிக்கவும், அவா்கள் முதிா்ச்சி அடைந்ததும், அவா்களின் திருமணத்தை முடிவு செய்வதையும் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நவீன சமூகத்தில் திருமணத்தை கட்டாயப்படுத்த முடியாது.

குழந்தை திருமணங்களைத் தடுப்பதிலும் அது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என நீதிமன்றம் நம்புகிறது.

மனுவில் தொடா்புடைய குழந்தை திருமணத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்தவரே புகாா் அளித்துள்ளாா். எனவே, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் தங்கள் மதத்தைப் பொருள்படுத்தாமல் குழந்தை திருமணத்தின் தீமை பற்றி அறிந்திருக்கிறாா்கள் என்பதையும் இது காட்டுகிறது.

எவ்வாறாயினும், பள்ளி பதிவேட்டில் குழந்தையின் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது எனும் மனுதாரா்களின் வாதத்தின் அடிப்படையில் தகுந்த நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.