விடாது கருப்புபோல கேரளத்தில் மீண்டும் கனமழை!

மீட்புப் பணிகளில் தொய்வு
பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதி
பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதி
Updated on
1 min read

கேரளத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கேரளத்தில் நிலச்சரிவால் கடுமையாக பாதிப்படைந்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து, இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

சூரல்மலை - முண்டக்கை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதி
என் கைதுக்கு உதயநிதிதான் காரணம்: சவுக்கு சங்கர்

பருவமழையால் பெய்த கனமழையால், வயநாட்டில் ஏற்பட்டு நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களில் 175-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 200 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது.

முண்டக்கை கிராமத்திலிருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.

அந்தப் பகுதிகளில் 34 முதல் 49 வீடுகள் மட்டுமே தற்போது இருப்பதாகவும், வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை கிராமமே அழிந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதி
மீண்டும் பிரச்னையை எதிர்கொண்ட மைக்ரோசாஃப்ட்: சைபர் தாக்குதலா?

இதனைத் தொடர்ந்து, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com