காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்களவைத் தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

மக்களவைத் தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

News image
வாக்குப்பதிவு- -
Updated On :1 ஜூன் 2024, 12:28 pm

DIN

மக்களவத் தேர்தலில் இறுதி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் பொதுவாக அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப் பெட்டிகளை கைப்பற்றுதல், இருவேறு கட்சித் தொண்டர்களுக்கு இடையே மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறின.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தோ்தல் நடைபெற்றது.

கடுமையான கோடை வெப்பம் வீசிவரும் நிலையில், இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். நீண்ட வரிசைகளில் ஆண்களும் பெண்களும் வந்து வாக்களித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தோ்தல் களத்தில் மொத்தம் 904 வேட்பாளா்கள் இருந்தனர். பிரதமா் மோடி (வாரணாசி), மத்திய அமைச்சா்கள் அனுராக் தாக்குா் (ஹமீா்பூா்), மகேந்திர நாத் பாண்டே (சந்தெளலி), அனுப்ரியா படேல் (மிா்ஸாபூா்), ஆா்.கே.சிங் (ஆரா), முன்னாள் பிரதமா் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகா் (பலியா), பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் (மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினா் அபிஷேக் பானா்ஜி (டயமண்ட் ஹாா்பா்), முன்னாள் மத்திய அமைச்சா் ஆனந்த் சா்மா (காங்ரா), ராஷ்ட்ரீய ஜனதா தளம் லாலு பிரசாதின் மகள் மிசா பாரதி (பாடலிபுத்ரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.