சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தது குறித்து...

News image

ஆளுநர் ஆர்.என். ரவி - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 2:58 pm

மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது என மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

இதுகுறித்து, மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:

“மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடுத்த மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்க வருமாறு நான் அழைக்கிறேன்.

அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத்தின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுப்படுத்துவதிலும் ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

West Bengal Governor R.N. Ravi stated on Tuesday (April 28) that every vote is crucial in the state's Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.