தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யானவை என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இன்று (ஜுன் 3) தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். கருத்துக்கணிப்புகள் பொய்யானவை என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களை மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தையும் தவறான திசையில் வழிநடத்திச் செல்ல வழிவகுக்கும். நாளை (ஜுன் 4) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறைக்குச் செல்லும் முன்பு பேசும்போது, ஊடகங்கள் மூலம் பாஜக பொய்யான கருத்துக்கணிப்புகளை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்ற கணிப்பு பொய்யானது என்றும், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள் மட்டுமே உள்ளதாகவும், ஆனால், பாஜக 33 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜுன் 1ஆம் தேதி நடைபெற்றது. அன்று மாலை பல்வேறு நிறுவனங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபாஷ் சரியான போட்டி!

குஜராத்தில் கட்சித் தொண்டா்கள் கைது: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தேர்தல் 1984 : மூன்றாவது முறையாக முதல்வர் எம்ஜிஆர்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


