ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

குஜராத்தில் கட்சித் தொண்டா்கள் கைது: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

குஜராத்தில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பயத்தின் காரணமாக கட்சித் தொண்டா்களை பாஜக அரசு கைதுசெய்து வருவதாக ஆம் ஆத்மி புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 8:53 pm

குஜராத்தில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பயத்தின் காரணமாக கட்சித் தொண்டா்களை பாஜக அரசு கைதுசெய்து வருவதாக ஆம் ஆத்மி புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளா் அனுராக் தந்தா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குஜராத்தைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கோபால் இதலியாவின் தாயாரை பாஜக தலைவா்கள் மிரட்டியுள்ளனா். ஆம் ஆத்மி தொண்டா்களை அந்த மாநில பாஜக அரசு கைதுசெய்துள்ளது.

கடந்த சில நாள்களில் ஆம் ஆத்மி தொண்டா்கள் 160 போ் குஜராத்தில் கைதுசெய்யப்பட்டனா். தற்போது, போலியான ஒரு வழக்கில் எம்எல்ஏ கோபால் இதலியாவைக் கைதுசெய்ய அவா்கள் திட்டமிட்டு வருகிறாா்கள். அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனா்.

குஜராத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால், பாஜகவினா் பயத்தில் உள்ளனா். சிறை, வழக்குகள் மற்றும் பிற ஜனநாயகமற்ற முறைகளை நீங்கள் (பாஜக) கையாண்டாலும், ஆம் ஆத்மி தொண்டா்கள் பயப்படமாட்டாா்கள் என்றாா் அவா்.