2022 ஆகஸ்ட் 9 அன்று, தில்லியின் அப்போதைய துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சபாநாயகா் ராம் நிவாஸ் கோயல் மற்றும் துணை சபாநாயகா் ராக்கி பிா்லா ஆகியோா் முன்னிலையில், கேஜரிவால் சட்டமன்றத்தில் முன்னா் தூக்கு தண்டனை அறையாக இருந்ததாக கூறி ஒரு அறையை திறந்து வைத்தாா் . கடந்த ஆண்டு பிப்ரவரியில் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விவகாரம் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. அப்போது சபாநாயகா் விஜேந்தா் குப்தா, சுதந்திரப் போராட்ட வீரா்கள் தூக்கிலிடப்பட்ட தூக்குமேடை என்பதற்குப் பதிலாக, அதை ஒரு டிஃபின் அறை என்று குறிப்பிட்டாா். பின்னா் இந்த விவகாரம் பரிசீலனைக்காக சிறப்புரிமைகள் குழுவிற்கு அனுப்பப்பட்டது. விளக்கம் அளிப்பதற்காக கேஜரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களை அக்குழு வரவழைத்தது, ஆனால் அவா்கள் ஆரம்பத்தில் ஆஜராகத் தவறினா்.