இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

News image
கோப்புப் படம்
Updated On :4 ஜூன் 2024, 9:51 am

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ள தெலுங்கு தேசக் கட்சிக்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வாழ்த்து கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தார்.

ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனை கட்சி முதலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி மக்களவைத் தேர்தலிலும், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.