டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் காயம்!

ஒரே வாரத்தில் நான்காவது தாக்குதல்...

News image
- -
Updated On :13 ஜூன் 2024, 2:46 am

DIN

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள், பயங்கரவாதிகள் இடையே புதன்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் காயமடைந்தார்.

கடந்த 4 நாள்களில் ரெய்சி, கதுவா மற்றும் தோடா பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பொதுமக்கள், ஒரு சிஆர்பிஎஃப் வீரர் பலியாகியுள்ளனர். இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 41 பொதுமக்கள், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள், சிறப்புப் படை காவலர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தோடா மாவட்டம் காண்டோ பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

பயங்கரவாதிகள் சுட்டதில் சிறப்புக் காவலர் ஃபரித் அகமது என்பவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரெய்சி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைப்படம்.

ரெய்சி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைப்படம்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருவதால், ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமராக மோடி பதவியேற்ற நேரத்தில், ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பேருந்து பள்ளத்தில் விழுந்து 9 பேர் பலியாகினர், 41 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, கதுவா மாவட்டத்தில் குடியிருப்பின் மீதும், தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.